சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் 'பெருங்கதை'யையும்; பவணந்தி 'நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் 'சிலப்பதிகாரத்'திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.
இவர் எழுதிய பாடலிலேயே தன் ஊர்ப்பெயரையும் வழங்கியுள்ளார்.
"ஆருந்தெரிவுரை விரித்தானடியார்க்கு நல்லன்,
காருந்தருவுமனையா னிரம்பையர் காவலனே",
எனும் இப்பாட்டில் நிரம்பையர் நாடே இவர் பிறந்த ஊராகத்தெரிகிறது.
|