தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அழகிய நம்பி

நாகப் பட்டினத்திலிருந்து பத்துக் காதத் தொலைவில் இருந்தது பிரம்ம புரம். அதை சற்றே பொிதான கிராமம் எனலாம்.

அந்தக் கிராமத்திலிருந்ததே ஒரே ஒரு பொிய மாளிகை தான். அது எங்கிருக்கிறது என பிரம்ம புரத்திற்குச் சற்றுத்தொலைவிலேயே சென்று கொண்டிருக்கும் சின்ன எறும்பைக் கேட்டாலும் வழி சொல்லும்.. அப்படிப் பிரபலமான ஒன்றாக இருந்தது அந்த மாளிகை. அந்த மாளிகையிலிருந்து தான் தனது வானியல் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தார் அழகிய நம்பி.

அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டதாலோ என்னவோ, அவருக்கு வேலை என்பது கொஞ்சமாகத் தான் இருந்தது- இங்கு மட்டுமல்ல.. சேரன் தலைநகரான வஞ்சி மாநகரத்திலும் தான்.. மாலை மங்கி இரவு வந்ததும், ஓாிரு ஜாமங்கள் அந்த மாளிகையின் மொட்டை மாடிக்குச் சென்று ஆராய்ச்சி செய்துவிட்டு, அவற்றை ஓலையில் குறிப்பெழுதிவிட்டு உறங்கி விடுவார். மறுபடியும் மறு நாள் இரவு தான் வேலை என்பதால், பகல் பொழுதுகளைக் கழிப்பது மிகச் சிரமமாக இருந்தது அவருக்கு.. அப்படிப் பட்ட பொழுதில் தான் ஏதாவது எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது அவருக்கு..

அப்படி முதலில் சில குறு நாடகங்களை எழுதி விட்டு அதை மாநக்காவரத்திலிருந்து வந்திருந்த தனது உறவினர் ஒருவாிடம் படிக்கக் கொடுத்தார். அவர் அதைக் கன்னாபின்னாவென்று பாராட்டி விடவே, அழகிய நம்பியுள் புதைந்திருந்த எழுத்தார்வம் விழித்தெழுந்தது-கூடவே அகந்தையும். அவற்றின் காரணமாக காவியங்கள், குறுங்காப்பியங்கள் என எழுதிக் கொண்டே போனார்.

 



© 2005 Kaniyatamil Software